News
காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் சென்ற காத்தான்குடி மாணவி பாத்திமா நதா பிரதமர் ஹரினியை சந்தித்து மகஜர் கையளித்தார்

காத்தான்குடியை சேர்ந்த மாணவி பாத்திமா நதா துவிச்சக்கர வண்டியில் கொழும்பு நோக்கிய பயணத்தை கடந்த 7ம் திகதி ஆரம்பித்து நான்கு நாட்களில் (11) கொழும்பு வந்து சேந்தார்.
வெள்ளியன்று(11) ஜனாதிபதி மாளிகையில் மகஜர் சமர்த்த மாணவி நதா, இன்றைய(14) தினம் பிரதமர் ஹரினியை சந்தித்து மகஜர் கையளித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் அற்ற எதிர்கால சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தியே இவர் #சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
14.10.2024
Almashoora Madawala news

