News
தனக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட போதைப்பொருள் வர்த்தகரையே கைது செய்த பொலிஸ் அதிகாரி…. இலங்கையில் சம்பவம்
பாரிய அளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளியைச் சேர்ந்த ‘கல் சம்பத’ எனப்படும் சஞ்ஜீவ குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மட்டக்குளி காவல்துறையின் நிர்வாக பிரிவு பொறுப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு காவல்துறை அதிகாரிகள் இடையூறு விளைவிப்பதாகவும், அதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில் மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்குவதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அவர் சூட்சுமமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார்