News

வெல்டிங் இயந்திரம் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி துப்பாக்கி தயாரித்து பாவித்தவர்கள் கைது

மாத்தறையில் உள்ள சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



ஆயுதக் குகையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 63 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அஹங்கமவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



ஆயுத தயாரிப்பு குகையில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஐந்து தோட்டாக்கள், ஒரு வெல்டிங் இயந்திரம் மற்றும் பல்வேறு உபகரணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இரண்டு துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது, அதன் பின்னர் மாத்தறை பொலிஸார் கொள்வனவு செய்தவர்களை கண்டுபிடித்து ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 47 மற்றும் 54 வயதுடைய அஹங்கம பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button