News
உதிரி பாகங்களை இறக்குமதி செய்து சட்டவிரோதமாக PCX உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்துவந்த நபர் கைது

சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிள் செய்த குற்றச்சாட்டின் பேரில் 40 வயதுடைய ஒருவர் ரங்கம்முல்ல பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டதுடன், உதிரிபாகங்களாகக் கொண்டு வரப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக ஒன்றுசேர்க்கப்பட்ட மூன்று Honda PCX மோட்டார் சைக்கிள்கள், ஆறு மோட்டார் சைக்கிள் என்ஜின்கள், அரைகுறை மோட்டார் சைக்கிள் மற்றும் கூடுதல் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
சந்தேக நபருடன் தொடர்புடைய சட்டவிரோத இறக்குமதி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலதிக குற்றங்களை வெளிக்கொணர வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

