News

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலியான சோக நிகழ்வு
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பதிவு



(ஏறாவூர் நஸீர் -ISD)

வந்தாறுமூலை பிரதான வீதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கதிர்காமநாதன் ரமேஸ்குமார் (48) என்பவர் தனது உறவினர் ஒருவருடன் வந்தாறுமூலை பெருவெளி வயலுக்கு மோட்டார் சைக்கிளில் பிற்பகல் 02.00 மணிக்கு சென்று,( 07-11-2024 )பிற்பகல் 03.30 மணியளவில் வீடு நோக்கி செல்ல,  வயல் வரம்பு வழியே மீண்டும் மோட்டார்சைக்கிளில் பின்ஆசனத்திலிருந்து  பயணித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்திற்குள்ளாகி  சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்தில் மயக்கமடைந்து சற்று நேரத்தில் மயக்கம் தெளிவடைந்து எழுந்த பின்னரே இவர் மரணித்திருப்பதை அடையாளம் கண்டு உறவினர்களுக்கு விடயத்தை தெரிவித்திருக்கிறார்.

ஏறாவூர் பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் முதற்கட்ட விசாரணைகளை தொடர்ந்து உடற்கூற்று பரிசோதணைக்காக பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

உடற்கூற்று பரிசோதனை முடிவுற்றதும் இன்று (08/11) பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பும் இவ்வாறான சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவு  காயங்குடாவிலும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button