News

வெளிநாட்டில் இருக்கும்  இலங்கையர்கள், இலங்கைக்கு  பணம் அனுப்பும் எண்ணிக்கை அதிகரித்தது

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெளிநாட்டுப் பண அனுப்பல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 4,345 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

எனினும் இது இந்த வருடத்தின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4,844 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது 11.05 சதவீத அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button