News

இன்று முதல் சதொச கடைகளில் 130 ரூபாய்க்கு தேங்காயும் 220 ரூபாய்க்கு அரிசியையும் பெற்றுக்கொள்ள முடியும் ; சதொச தலைவர் தெரிவிப்பு

லங்கா சதொச கடைகளில் இன்று (6) முதல் வாடிக்கையாளர்களுக்கு நாடு அரிசி மற்றும் தேங்காய்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார்.



இதன்படி வாடிக்கையாளர் ஒருவர் ஐந்து கிலோ அரிசியை கிலோ 220 ரூபாவிற்கும், மூன்று தேங்காய்களை ஒன்று 130  ரூபாபடியும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.



அரிசி மற்றும் தேங்காய் சதொச ஊடாக நுகர்வோருக்கான சந்தைப்படுத்தல் நேற்று (5) கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டதாக  டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button