News
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருந்து 600,000 போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் ஒருவர் மற்றும் 3 ஆண்கள் கைது

போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து 600,000 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் கைதானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



