News

பொஹொட்டுவ கூட்டத்திற்கு அனுராதபுரத்தின் இரண்டு மைதானங்களையும் வழங்க முடியாது என மறுப்பு.. வீதிக்கு வந்த நாமல் !!

செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (பொஹொட்டுவ) மாவட்டக் கூட்டத்திற்காக நகரத்தின் பிரதான விளையாட்டு மைதானங்கள் இரண்டையும் வழங்குவதற்கு அனுராதபுரம் மாநகர சபை மறுப்பு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களான வாலிசிங்க ஹரிஸ்சந்திர மைதானம் மற்றும் சல்காது (மாநகர சபை) மைதானம் ஆகியவற்றை இந்த அரசியல் கூட்டத்திற்காக வழங்க முடியாது என மாநகர சபை ஆணையாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியைப் (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் மேயரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சல்காது மைதானத்தைப் பெறுவதற்காகத் தாங்கள் முன்னதாகவே விண்ணப்பித்திருந்த நிலையிலும், பின்னர் விண்ணப்பித்த வேறொரு தரப்பினருக்கு அந்த மைதானத்தை வழங்க மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வாலிசிங்க ஹரிஸ்சந்திர மைதானமும் மூன்றாம் தரப்பொன்றினால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறித் தங்களுக்கு வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்தச் சூழ்நிலையினால், செப்டம்பர் 12 ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள மாவட்டக் கூட்டத்திற்காக மாற்று இடமொன்றைக் கண்டறிய வேண்டிய நிலை அக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button