“அடுத்த மாதம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க பரிசீலனை”
அரசாங்கம் இருக்கும் சூழ்நிலையைச் சமாளித்து எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால், மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே அந்த நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் ஒரே நேரத்தில் குறைக்க முடியாது என்றும், எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலையை மேலும் குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும், கப்பல் கட்டண உயர்வு மற்றும் ஆர்டர்கள் ரத்து செய்யப்படல் போன்ற காரணிகளும் எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


