News
முடியும் என்றால் நாமல் ராஜபக்ஷவின் பெயரை கூறாமல் கூட்டம் நடத்துமாறு பகிரங்க சவால் ..
முடியும் என்றால் நாமல் ராஜபக்ஷவின் பெயரை கூறாமல் கூட்டம் நடத்துமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் டி வி சாணக பகிரங்க சவால். விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் ,
“நாமல் ராஜபக்ஷவின் பெயரைக் கூறாமல் NPP அரசு இரண்டு வருடங்களில் நாட்டிற்கு செய்த அபிவிருத்திகள் மற்றும் சேவைகளை கூறி கூட்டம் நடத்துமாறு ஜனாதிபதிக்கு பகிரங்க சவால் விடுக்கிறோம்.
விவசாயிகள் வீதிக்கு வந்துள்ளனர்,வர்த்தகர்கள் திண்டாடுகின்றனர்,விலைவாசி உயர்வால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் ஆனால் அரசாங்கள் அவற்றுக்கு தீர்வு வழங்காமல் நாமல் ராஜபக்ஷ மீது தொங்குகிறது”



