News
3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயன்ற சுங்க பரிசோதகர் கைது… தொழிலும் போனது

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயன்றதற்காக சுங்க பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
அமெரிக்காவிலிருந்து மாலபே பகுதியில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்ட 3 கிலோகிராம் 200 கிராம் கஞ்சா எண்ணெய் பொதியை சுங்க பரிசோதகர் விடுவிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுங்க பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

