News

பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறி, சஜித்தின் கட்சி வேட்பாளர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி இலட்சக்கணக்கில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பதிவு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதுருகிரிய, பொரலுகொட வீதியில் உள்ள பொரலுகொட பிரிவைச் சேர்ந்த, வேட்பாளரின் வீட்டிற்கு, பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள், துப்பாக்கியைக் காட்டி பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு வந்த கொள்ளையர்கள் ரூ.180,000 பணம் இருந்த பணப்பையை திருடிச் சென்றுள்ளனர். மற்றுமு் ரூ. 85,000.மதிப்புள்ள இரண்டு மொபைல் போன்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

ஒப்பந்ததாரராக பணிபுரியும் புகார்தாரர், தனது வீட்டிற்குள் இருந்தபோது, ​​வீட்டின் முன் உள்ள கேட்டை யாரோ தட்டுவதைக் கேட்டு, கேட்டை திறந்துள்ளார். அப்போது, பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அவ்விருவரும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி, இவ்வாறு கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button