News
குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை ; தேவானந்த சுரவீர

முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு நீதிமன்றங்கள் தண்டனை விதித்தமையும், அரசியல்வாதிகள் குழுவிற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமையும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின்படி மேற்கொள்ளப்படுவதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று, தேசிய மக்கள் சக்தி கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
தற்போது இந்த விடயம் பேசுபொருளாகியுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை குறிப்பிட்டார்.

