News
கைது செய்ய வந்த பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய 24 வயது அழகு நிலைய பெண் கைது.

கைது செய்ய வந்த பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்காக அழகு நிலைய ஊழியரான 24 வயதுடைய பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக வதுரம்ப பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் அவரது நண்பரின் வீட்டில் இருப்பதாக வதுரம்ப பொலிஸூக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை கைது செய்யச் சென்ற அதிகாரிகளை அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

