News

மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்களை கத்தியால் தாக்கவும், காற்சட்டை கழற்றி அநாகரீகமாகவும் நடந்த நபர் கைது

வெல்லவாய மின்சார சபை அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, வெல்லவாய ஹடபனகல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.



வீட்டில் இருந்த நபர் மின் கட்டணம் செலுத்தாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



மின்சார ஊழியர்கள் வீட்டிலிருந்து மின்சாரத்தை துண்டித்ததால் கோபமடைந்த வீட்டின் உரிமையாளர், கத்தியை எடுத்து மின் ஊழியர்களைத் தாக்க முயன்றுள்ளார், தனது கால்சட்டையைக் கழற்றி காட்டி, அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.



இது தொடர்பாக மின்சார சபை அதிகாரிகள் வெல்லவாய பொலிஸாரிடம் செய்த புகாரின் அடிப்படையில், சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இந்த மாதம் 17 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button