News
இஸ்ரேல் மருத்துவமனையை தாக்கியதற்கு ஈரான் “பெரும் விலையை” செலுத்த வேண்டியிருக்கும் – இதற்காக தெஹ்ரானில் உள்ளவர்களை நாங்கள் பெரும் விலையை செலுத்தச் செய்வோம் என நெதன்யாஹு எச்சரிக்கை

இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள சொரோகா வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானை எச்சரித்து X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இன்று காலை, இஸ்ரேலின் பீர் ஷேவாவில் உள்ள சொரோகா வைத்தியசாலை மற்றும் நாட்டின் மையத்தில் உள்ள பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு ஈரான் “பெரும் விலையை” செலுத்த வேண்டியிருக்கும் . தெஹ்ரானில் உள்ளவர்களை நாங்கள் பெரும் விலையை செலுத்தச் செய்வோம்” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

