News
இந்த துப்பாக்கியை வைத்திருந்த நபர் பொலிஸாரால் கைது.

அம்பாந்தோட்டையில் திஸ்ஸமஹராமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மூன்று உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (03) பிற்பகல் திஸ்ஸமஹராமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹராமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் திஸ்ஸமஹராமை பகுதியை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹராமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

