News

மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த போதிலும், 62 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இ.போ.ச திருகோணமலை – யாழ்பாண பஸ் சாரதி

மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த போதிலும், 62 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி.



திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின்சாரதி,  சாரதி இருக்கையில் அமர்ந்திருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கவனமாக பஸ்ஸை நிறுத்தி இருக்கையில் மயங்கி விழுந்தார்.



இதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்த பயணிகள், சாரதியை சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



மாரடைப்புக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட பின்னரும், பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டதற்காக பஸ் சாரதியை, பஸ் பயணிகள் மற்றும் யாழ்ப்பாணம் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவின் சிரேஷ்ட அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker