வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பிய கணவன் பேரூந்தினுள் இருந்த மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் வெ*ட்டிய சம்பவம் இன்று காலை பண்டாரவளையில் பதிவு

பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பேருந்தில், கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் வெட்டியதில், அவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம், பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மனைவி தியத்தலாவை ஆதார மருத்துவமனையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு குழந்தைகளின் தாயான மனைவிக்கு 32 வயது, அவர்கள் பண்டாரவளையில் உள்ள லியங்கஹவெல பலகல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது, மேலும் கணவர் பேருந்தின் பின் இருக்கையில் இருந்து தனது மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.
சந்தேக நபரான கணவர் தற்போது பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டு சமீபத்தில் நாடு திரும்பியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பண்டாரவளை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

