News

மண் வெட்டியால் தா*க்குதல் நடத்தப்பட்டதில் பெண் ஒருவர்  உயிரிழப்பு #பொத்துவில் பொலிஸ் பிரிவு

பொத்துவில், ஹுலன்னுகே, 12வது தூண் பகுதியில், ஒரு பெண் மீது நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கியதாகவும், படுகாயமடைந்த நிலையில், லாஹுகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் பொத்துவில் காவல் நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் ஹுலன்னுகே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய கோனார முதியன்செலாகே விமலவதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட மோதலின் போது, மண்வெட்டியால் தலையில் தாக்கப்பட்டு அந்தப் பெண் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை இறந்த பெண்ணின் கணவரின் சகோதரர் மேற்கொண்டார்.

பின்னர் அவர் ஹுலன்னுகே காவல் நிலையத்திற்குச் சென்று காவல்துறையிடம் சரணடைந்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button