News
Rebuilding Sri Lanka வங்கிக் கணக்கிற்கு இதுவரை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து 70 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.

இதுவரை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து 30,470 பண வைப்புகளின் மூலம் “Rebuilding Sri Lanka” என்ற கணக்கிற்கு 700 மில்லியன் ரூபா வரை பணம் கிடைத்துள்ளது.
ஒரு நாளைக்குச் சராசரியாக,
100 மில்லியன் ரூபா பணம் கிடைக்கின்றது!
இதுவரை, பிரான்சில் இருந்து அதிகபட்ச பணம் கிடைத்துள்ளதுடன், அமெரிக்கா, கனடா மற்றும் கொரியா உட்பட 33 நாடுகளில் இருந்து பணம் கிடைத்துள்ளது.
இத் தகவலை – நிதி அமைச்சு செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.




