News
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்போவதில்லை என அறிவிப்பு வெளியானது

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்போவதில்லை என இறக்குமதியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இன்று (23) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்



