திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் ஏதேனும் இருந்தால் அவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று எரி சக்தி அமைச்சர் உறுதியளித்தார்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் ஏதேனும் இருந்தால் அவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கம் திட்டமிட்ட சூழ்நிலைகளின் கீழ் மட்டுமே மின்சார விநியோகத்தைத் தடை செய்யும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் திடீர் மின்வெட்டு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கவலைகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜயகொடி, அண்மைய மின்சாரம் துண்டிக்கப்பட்டமையானது திட்டமிடப்பட்ட மின்வெட்டு அல்ல, மாறாக மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட பாத
ிப்புகள் என்று விளக்கமளித்தார்.
“மின்சார விநியோகத்தில் சில தடங்கல்கள் உள்ளன, இது ஒரு புதிய விடயமல்ல. இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்த சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, சில நேரங்களில் மின்தடைகள் ஏற்படுகின்றன, அங்கு உடனடியாக மின்சாரத்தை மீட்டெடுக்க நாங்கள் பணியாற்றுகிறோம்,” என்று அவர் கூறினார், இவை மின்தடைகளே தவிர திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் அல்ல என்று அவர் வலியுறுத்தினார்.
மின்சாரத் துறையை வலுப்படுத்தவும், தடங்கல்களைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜயகொடி வலியுறுத்தியதுடன், திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் அவசியமானால் பொதுமக்கள் முன்னரே அறிவிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.
எதிர்க்கட்சியின் இத்தகைய கேள்விகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

