News
நிலக்கரியில் தரச் சிக்கல் இருப்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி, இது பொதுமக்கள் மீது சுமத்தப்படாது என உறுதியளித்ததுடன், சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நாம் நிலக்கரியை உண்பதில்லை..

சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியில் தரச் சிக்கல் இருப்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இதற்கான செலவு பொதுமக்கள் மீது சுமத்தப்படாது என உறுதியளித்ததுடன், சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தரத்தை சரிபார்ப்பதற்கு தாம் “நிலக்கரி உண்பதில்லை” எனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான மதிப்பீடுகள் ஆய்வகப் பரிசோதனைகள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

