ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கக் கோரும் ஐ.நா தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் தமது வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்தன.. ஐ. நா வின் முயற்சியும் தோல்வியடைந்தது.

பல வார கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட வளைகுடா நாடுகளின் ஆதரவு பெற்ற வரைவுத் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு சபையில் ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ (Veto) அதிகாரம் மூலம் ரத்து செய்துள்ளன.
இந்த தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவு அளித்தன, அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இருப்பினும், ரஷ்யாவும் சீனாவும் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதால் இந்த முயற்சி தோல்வியடைந்தது.
தொடக்கத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் அத்தியாயம் VII-ன் கீழ் முன்மொழியப்பட்ட இந்த வரைவுத் தீர்மானம், பின்னர் முக்கிய நீர்வழியைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த பாதுகாப்பு முயற்சிகளை “வலுவாக ஊக்குவிக்கும்” வகையில் மாற்றியமைக்கப்பட்டது.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல்லத்தீப் பின் ரஷித் அல் ஜயானி கூறுகையில், இந்த முன்மொழிவு மீண்டும் மீண்டும் நிகழும் விரோதமான செயல்களுக்கு ஒரு தீவிரமான பதிலடி என்று கூறினார். மேலும் இதில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் உலகளாவிய ரீதியில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கிய நீர்வழிகளை ஆயுதமாகப் பயன்படுத்துவது மற்ற இடங்களிலும் பிரதிபலிக்கக்கூடும் என்றும், இது உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.


