டிரம்ப்பை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு முயற்சி சம்பவம் தொடர்பில் தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக நெதன்யாகு தெரிவிப்பு – வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை என மேலும் தெரிவிப்பு

டிரம்ப்பை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு முயற்சி சம்பவம் தொடர்பில் தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக நெதன்யாகு தெரிவிப்பு – வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை என மேலும் தெரிவிப்பு
வோஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் விருந்து நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவியைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட இந்தத் தொடர் முயற்சிகளைக் கேட்டு நானும் என் மனைவியும் மிகுந்த அதிர்ச்சியடைந்தோம். அரசியல் தலைவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு யாருக்கு எதிராகவோ வன்முறையை ஏவுவதற்கு இந்தச் சமூகத்தில் இடமில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.



