இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்களிடம் இருந்து ஏராளமான போலி அமெரிக்க டொலர்கள் சிக்கின

உனவட்டுன சுற்றுலாப் பிரிவு காவல்துறையினருக்கு இன்று (07) காலை கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 5,200 அமெரிக்க டொலர் பெறுமதியான கள்ள நோட்டுகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ஐந்து கைத்தொலைபேசிகளுடன் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 27 மற்றும் 26 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, சுமார் 1.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான கள்ள நோட்டுகள் இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.
உனவட்டுன பகுதியில் வெளிநாட்டினருக்கு மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றில், இந்தக் கள்ள நோட்டுகளைக் கொடுத்து மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுக்க இவர்கள் முயற்சித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர்,
சந்தேக நபர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை (08) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

