News

நேற்றிரவு சென்னை நைட் கிளப்பில் ஏற்பட்ட தகறாரு வீதியிலும் தொடர்ந்ததில் 18 வயது இலங்கைத் தமிழ் அகதிப் பெண் காரால் மோதிக் கொ*லை செய்யப்பட்ட சம்பவம் பதிவு

சென்னை கோயம்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை (மே 31) நள்ளிரவில்  ஏற்பட்ட மோதல், கொடிய வாகன விபத்தாக மாறியதில் 18 வயதுடைய இலங்கைத் தமிழ் அகதிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யான்சி என அடையாளம் காணப்பட்ட உயிரிழந்த பெண்,  கார் மோதியதில் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார்.

யான்சியுடன் பயணித்த 17 வயது சிறுமியும் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பொலிஸாரின் கூற்றுப்படி, சனிக்கிழமை இரவு கோயம்பேட்டில் உள்ள மதுபான நைட் கிளப் ஒன்றிற்குள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்குக் காரணமாகும். 

பாதுகாப்புப் பணியாளர்கள் தலையிட்டு இரு குழுக்களையும் வளாகத்திற்கு வெளியேற்றினர், ஆனால் மோதல் வீதியிலும் தொடர்ந்தது.


மோட்டார் சைக்கிள்களில் வந்த யான்சியின் நண்பர்கள் சிலர், பாலகுமார் என்ற பாலகுரு மற்றும் சுமன் சக்திவேல் உட்பட எதிர் குழுவினர் இருந்த கார் மீது கல்வீசித் தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தியதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.


இதற்குப் பழிவாங்கும் விதமாக, சுமன் சக்திவேல் காரை மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட யான்சி, தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கோயம்பேடு பொலிஸார் தேடுதல் வேட்டையைத் தொடங்கி, அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தின் போது காரில் இருந்த பாலகுமார் என்ற பாலகுரு கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய போது, தனது நண்பரான சுமன் சக்திவேல் தான் வாகனத்தை ஓட்டினார் என்று அவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


பொலிஸார் இதுவரை ஏழு பேரைக் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button