தேநீர் கடை கூட நடத்தவில்லை’ எனக் கூறப்பட்ட அனுர, இரண்டு வருடங்களில் திவாலான நாட்டை மீட்டெடுத்தார்… – நிலாந்தி கொட்டஹச்சி

நீர்கொழும்பு (மீகமுவ) சிறைச்சாலை சம்பவத்தை அரசாங்கம், எதிர்க்கட்சியைப் போல இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை என்று ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்.
ஒரு தேநீர் கடையைக் கூட நடத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு தலைவர், இரண்டு வருடங்களுக்குள் நாட்டைப் பொருளாதாரப் பள்ளத்தில் இருந்து மீட்டெடுத்து முற்போக்கான பாதையில் கொண்டு வந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஒரு சிறைச்சாலையைக் கூடப் பார்த்துக்கொள்ள முடியாத அரசாங்கம் நாட்டின் மக்களை எவ்வாறு பார்த்துக்கொள்ளப் போகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு எந்தவொரு அடிப்படையும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய சம்பவத்தின் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் லாபங்களுக்காக இதனைப் பயன்படுத்துவதை தாம் கடுமையாகக் கண்டிப்பதாக நிலாந்தி கொட்டஹச்சி மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


