News

விரைவில் பொதுத்தேர்தல் வருவதால் இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று  கலைக்கப்பட்டது

இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி  நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு தனது 4 ஆண்டுகாலப் பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.



இந்த புதிய பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மொத்தம் 120 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னெட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போட்டியிட உள்ளதால், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.



இந்நிலையில், தேர்தல் முடிவடைந்த பின்னர், புதிய அரசின் தலைமையில் புதிய பாராளுமன்றம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button