News
ராஜபக்ஷாக்களின் குற்றங்களாலேயே நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகள் நிறைந்து வழிகின்றன..

தங்களால் அல்ல, மகிந்த, பசில், கோட்டாபய மற்றும் நாமல் ஆகியோர் இந்நாட்டிற்குச் செய்த அழிவின் காரணமாகவே சிறைச்சாலைகள் நிறைந்து வழிகின்றன என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் இந்நாட்டை ஒரு குற்றவியல் ராஜ்யமாக (குற்றங்கள் நிறைந்த நாடாக) மாற்றியதன் காரணமாக, தாம் ஆட்சிக்கு வரும்போது 27,000 ஆக இருந்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கை தற்போது 40,000 ஆக உயர்ந்துள்ளதாகப் பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடியாத ஒரு சிறிய குழுவினர் நாமலுக்குப் பின்னால் சென்றாலும், ராஜபக்ஷ குடும்பத்தினர் இந்நாட்டிற்குச் செய்த அழிவை பெரும்பான்மையான மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்றும் மகிந்த ஜெயசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.


