ஜனாதிபதியின் பதவிக் காலம் 40% வீதத்தினால் குறைந்துள்ளது.. ஆனால் அவரது பொய்கள் கொஞ்சம் கூட குறையவில்லை..
ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி தற்போது நிறைவடைந்துள்ள போதிலும், அவர் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
அதிவேக நெடுஞ்சாலைகள், மின்சார ரயில் அமைப்புகள், மீன்பிடித்தலுக்கான நவீன தொழில்நுட்ப பயன்பாடுகள் அல்லது கனிம வளங்கள் ஆராய்ச்சி போன்ற எந்தவொரு திட்டமும் இதுவரை தொடங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
“பெரிய அளவிலான பேச்சுக்கள் (Lorry talks) பல உள்ளன. ஆனால் எந்த வேலையும் நடக்கவில்லை. சமூகத்தின் ஒவ்வொரு துறையும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஒரே ஒரு விஷயம் மட்டுமே குறையவில்லை, அது பொய் சொல்வது தான்,”
என்றும் திரு. மரிக்கார் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் சீர்குலைந்து வருவதாகவும், மக்களை ஏமாற்றும் அரசியல் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு வலியுறுத்தினார்.



