News
2018 இல் இராணுவ சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் தற்போது அவரின் மனைவி கைது

கிரிந்திவெல பகுதியில் 2018 செப்டம்பர் 09 அன்று ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டு, உயிரிழந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று (07) பிற்பகல் கிரிந்திவெல காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உயிரிழந்தவரின் மனைவியான நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


