கிராமத்தில் ஒரு சாவு என்றாலும், திருமணம் என்றாலும் இருப்பவர்கள் ஜே.வி.பி.யினரே.. வஞ்சகர்களுக்கு எம்மோடு இருக்க முடியாது… எதிர்த்தரப்பினர் வெறுப்பையே விதைக்கின்றனர்..- பிரதம மந்திரி
கிராமத்தில் உள்ள மற்றவர்களுக்கு உதவும், அவர்களைப் பற்றிச் சிந்திக்கும் நபர் ஜே.வி.பி அல்லது NPP (தேசிய மக்கள் சக்தி) உறுப்பினராகவே இருப்பார் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அயலவரின் வீட்டு விசேஷங்களுக்கும், மரண நிகழ்வுகளுக்கும், தான வீடுகளுக்கும் உதவுவதோடு, சுனாமி போன்ற ஆபத்தான காலங்களிலும் முதலில் முன்வருபவர்கள் தமது கட்சியினரும், அந்த எண்ணங்களை மனதிலே கொண்டவர்களுமே என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தமது கட்சிக்குள் வஞ்சகர்களுக்கு இடமில்லை எனவும், மக்களை ஏமாற்றுபவர்களுக்குத் தான் நிபந்தனையற்ற வகையில் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
தமது தரப்பு சமூகத்தில் வஞ்சகத்தையும் வெறுப்பையும் விதைப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டாலும், வெறுப்புணர்வானது எதிர்த்தரப்பு அரசியல் மேடைகளிலிருந்தே வெளிப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டுகிறார்.
இணையத்தள செய்திச் சேவை ஒன்றுடனான கலந்துரையாடலிலேயே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

