News
தான் செய்த தவறை ஏற்றுக்கொண்டு திருந்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் – அவ்வாறான சந்தர்ப்பம் அங்குலிமாலைக்கு கூட கிடைத்தது ; சாகர

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கைது மற்றும் நிலவும் அரசியல் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (09) ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியுள்ளார்.
“அன்று ரணில் யார் திருடன், மஹிந்த திருடன் என்று கத்தினாரே?” என கடந்தகால அரசியல் மோதல்களை நினைவுபடுத்தி அவரிடம் கேள்வியெழுப்பப் பட்டது…
எந்தவொரு நபரும் தனது வாழ்க்கையில் தவறு செய்யும்போது, தான் செய்த தவறை ஏற்றுக்கொண்டு திருந்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய சந்தர்ப்பம் அங்குலிமாலைக்கு கூட கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அத்தகைய சந்தர்ப்பம் வேறு எந்தவொரு நபருக்கும் இருக்க வேண்டும் என்றும் சாகர காரியவசம் வலியுறுத்தினார்.

