News

மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் விசாரணை… முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு

முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை 9.30 மணிக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



குறித்த கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே முன்னாள் விமானப்படை தளபதி அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button