News
“நேர்ஸ்” வீட்டிற்கு வரும் வைத்திய முறையை உருவாக்குவோம் ! ; அனுர குமார

வீட்டிற்கே செவிலியர் சேவையை வழங்கும் புதிய சுகாதார முறைமையை உருவாக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சுகாதாரத் துறையில் கொண்டுவரப்படவுள்ள புதிய மாற்றம் குறித்து உரையாற்றிய ஜனாதிபதி வைத்தியசாலைக்கு மேலதிகமாக ஆரோக்யா வைத்திய நிலையங்களை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் உலகில் உள்ள அதி நவீன வைத்திய உபகரணங்களை கொள்வனவு செய்ய அடுத்த வருடம் நிதி ஒதுக்கப்படுமென அவர் கூறினார்.



