News
இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் 67 பேர் வரை கைது.

இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடந்த சில மாதங்களில் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஒரு அறிக்கையில், இலஞ்சம் பெற்றதற்காகவும் வழங்கியதற்காகவும் 67 பேர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 8 கான்ஸ்டபிள்கள் மற்றும் 9 சார்ஜென்ட்கள் உட்பட 20 பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.
மேலும், இந்த காலகட்டத்தில் 22 பொதுமக்கள் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் மூன்று கிராம சேவை அலுவலர்களும் மற்றும் ஒரு பாடசாலை அதிபரும் அடங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

