நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு இல்லை – சந்தையில் தேங்காய் மாபியாக்களால் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க முயற்சி இடம்பெறுகிறது; வர்த்தக அமைச்சர்

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு இல்லை என்று கூறிய வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, சந்தையில் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தும் முயற்சி இன்று இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் மொத்த தேங்காய் அறுவடை 2,684 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அது 14 வீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தையில் தேங்காய்க்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சந்தையில் தேங்காய் மாபியாவை உருவாக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களின் தென்னை உற்பத்திகளை சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குருநாகல் மற்றும் சிலாபம் தோட்டங்கள் ஒரு மில்லியன் தேங்காய்களை வழங்குவதாகவும், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை அடுத்த இரண்டு வாரங்களுக்கு 500,000 தேங்காய்களை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்

