News
கண்டியில் இருந்து தெல்தோட்டை நோக்கி பயணித்த வேன், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

கண்டியில் இருந்து தெல்தோட்டை நோக்கி பயணித்த வேன் ஒன்று தலை கீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெல்தோட்டை க்ரேட்வெளி பெற்றோல் நிரப்பு நிலையம் முன்பாகவே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகன சாரதிக்கு தூக்கம் கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு அதிர்ஷ்டவசமாக வேனில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



