🇸🇦🇱🇰 இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் ஊடக அறிக்கை.

🇸🇦🇱🇰 இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் ஊடக அறிக்கை.
—————————————————————————-
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தை திறந்து வைக்கும் இன்றைய நிகழ்வில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சவூதி அரேபியா இராச்சியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மையைப் பிரதிபலிக்கும் முக்கிய அபிவிருத்தித் திட்டமாக இது அமைந்துள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னேற்றுவதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் சிறந்த சான்றாக இந்தச் சாதனை விளங்குகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத் அவர்களுக்கும், பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத் அவர்களுக்கும், அவர்களின் தொலைநோக்குப் பார்வையுடைய தலைமையிற்கும், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பங்காளி நாடுகளில் நிலையான அபிவிருத்தியை முன்னெடுக்கும் மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு அவர்கள் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று, இம்முக்கிய திட்டத்திற்கு நிதியளித்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய சவூதி அபிவிருத்தி நிதியத்திற்கும் (Saudi Fund for Development) எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மருத்துவ பீடத்தின் நிறுவல் என்பது மனித வளம், அறிவு மற்றும் இலங்கையின் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடாகும். அதேவேளை, உலகம் முழுவதும் தாக்கமிக்க அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் சவூதி அரேபியாவின் நீண்டகால அர்ப்பணிப்பையும் இது மேலும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த புதிய மருத்துவ பீடம், எதிர்கால மருத்துவ நிபுணர்களை உருவாக்குவதிலும், இலங்கை மக்களுக்கு சேவையாற்றுவதிலும், மேலும் எமது இரு நாடுகளுக்கிடையிலான நெருக்கமான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்.











