News
சோதனை சாவடியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்ததரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு #கட்டுநாயக்க

கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் துப்பாக்கிச் சூடு ஒன்று இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்து போலீஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன



