News
விசாரணைகளுக்கு பயந்து முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியானது..

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதற்கமைய, குறித்த முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு எதிராக சமகால அநுர அரசாங்கம் விசாரணைகள் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த ஊடகங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன.



