News
பாகிஸ்தானில் இருந்து வந்த ஏராளமான போதைப்பொருட்கள் கொழும்புத் துறைமுகத்தில் சிக்கியது

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் (Container) ஒன்றிலிருந்து பெருந்தொகையான போதைப்பொருட்களை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) கைப்பற்றியுள்ளது.
அறிக்கைகளின்படி, இந்த போதைப்பொருள் கையிருப்பு ஐஸ் (ICE) எனச் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கொள்கலனுக்குள் இருந்த துண்டுகளுக்குள் (Towels) மறைத்து வைக்கப்பட்டு, பாகிஸ்தானிலிருந்து இந்நாட்டுக்கு இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கண்டுபிடிப்பு தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



