News

ஐரோப்பாவில் இருந்து காஸா மக்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்ற கப்பல் இஸ்ரேல் இராணுவத்தால் இடைமறிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் காசாவுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க். இவர் பிரீடம் புளோட்டிலா மேட்லீன் என்ற பாலஸ்தீன ஆதரவு தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து காசாவுக்கு கப்பலில் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதாக அறிவித்தார்.

அதன்படி, அந்த கப்பலில் கிரெட்டா தன்பெர்க், பிரான்ஸ் எம்.பி. ரிமா ஹசன் உள்பட 12 பேர் பயணித்தனர்.

இத்தாலியின் சிஸ்லி தீவில் இருந்து காசா நோக்கி புறப்பட்ட அந்த கப்பல் இன்று அதிகாலை இஸ்ரேல் கடற்பகுதி அருகே சென்றபோது இஸ்ரேல் அதிரடிப்படையினர் அதை இடைமறித்தனர்.



கப்பலுக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் அதில் இருந்த கிரெட்டா தன்பெர்க் உள்பட 12 பேரையும் கைது செய்தனர். விளம்பரத்திற்காக கிரெட்டா தன்பெர்க் உள்பட 12 பேரும் இந்த செயலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியை இஸ்ரேல் வெளியுறவுத்துறை, கைது செய்யப்பட்ட 12 பேரும் இஸ்ரேல் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button