சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு விழா; பிரதம அதிதியாக சட்டத்தரணி முஜீப் அமீன்..!

தி/கிண்/ரீ.பீ. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கும், க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்குமான கௌரவிப்பி நிகழ்வு கிண்/ரீ.பீ. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்று (19) நடைபெற்றது.
இந்நிகழ்வின், பிரதம அதிதியாக பிரபல்ய சமூக சேவையாளரும், பரக்கா சரட்டி நிறுவனத்தின் தெற்காசியா பிராந்தியத்திற் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி முஜீப் அமீன் அவர்கள் கலந்துகொண்டு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைத்தார்.
இதன்போது, சட்டத்தரணி முஜீப் அமீன் செய்துவரும் சமூக சேவைகளை பாராட்டி பாடசாலை நிர்வாகத்தினரால் சினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், புத்திஜீவிகள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
– ஊடகப்பிரிவு






