News

வீட்டினுள் ஏற்பட்ட தீ விபத்தில், வாடகைக்கு இருந்த நபர் உயிரிழப்பு

நாரஹேன்பிட்டிய – 397 வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்sதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



தீ பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், பொலிஸாரால் கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வந்த சுமார் 50 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



தீ பரலுக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், சம்பவம் குறித்து நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker