News

வாகன இறக்குமதி தடை செய்யப் படாது-  வரி உயர்வும் ஏற்படாது என ஜனாதிபதி உறுதி அளித்தார்

வாகன இறக்குமதி தடை இல்லை; வரி உயர்வும் இல்லை – ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க உறுதியளித்தார்

வாகன இறக்குமதி தடை செய்யப்படும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க.

இறக்குமதி எவ்வித இடையூறுமின்றி தொடரும் எனவும், வரி உயர்வு எதுவும் திட்டமிடப்படவில்லை எனவும் இன்று உறுதியளித்தார்.

“வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என்பது உண்மையற்ற வதந்தி. இந்த ஆண்டு வாகனம் வாங்க முடியாவிட்டால், அடுத்த ஆண்டு வாங்கலாம். எந்த மாற்றமும் இருக்காது,” என ஜனாதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சிலர் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தற்போதைய கொள்கையை மாற்ற அரசாங்கத்திற்கு எவ்வித நோக்கமும் இல்லை எனவும் வலியுறுத்தினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button