நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறோம்- இன்று எங்களது ஜிடிபி (GDP) 100 பில்லியன் டாலராக உயர்ந்து, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதற்கும் அன்று இஸ்ரேல் எமக்கு ஆதரவளித்ததே காரணம் ; உகாண்டாவின் ராணுவத் தளபதி (அந்நாட்டின் அதிபரின் மகன்)

உகாண்டாவின் ராணுவத் தளபதியும், அந்நாட்டின் அதிபர் யோவேரி முசெவேனியின் மகனுமான ஜெனரல் முஹூசி கைனருகாபா, கடந்த வாரத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட தொடர்ச்சியான பதிவுகளில், ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாகவும், உகாண்டா படைகளை வழங்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த அதேவேளையில், இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
“மத்திய கிழக்கில் போர் இப்போது முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உலகம் இதனால் சோர்வடைந்துள்ளது. ஆனால் இஸ்ரேலை அழிப்பது அல்லது தோற்கடிப்பது பற்றிய எந்தவொரு பேச்சும் எங்களைப் போருக்குள் கொண்டு வரும். அது இஸ்ரேலின் பக்கமே!” என்று கைனருகாபா எழுதியுள்ளார்.
கூடுதல் பதிவுகளில், தனது ஆதரவை மத ரீதியாக வெளிப்படுத்திய கைனருகாபா, “நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் இஸ்ரேலுடன் நிற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “உலகால் மறக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட தாவீது (David) உகாண்டா தான். கோலியாத் (Goliath) எனும் அரக்கனை நாங்கள் தோற்கடிப்போம்” என்றும் அவர் சேர்த்துக் கொண்டுள்ளார்.
ஈரான் மீது தரைவழித் தாக்குதலைத் தொடங்குமாறு இஸ்ரேலை வலியுறுத்திய அவர், அதில் உகாண்டா படைகளும் பங்கேற்கலாம் என்றும் கூறினார்.
தனது கருத்துக்களுக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதிலளித்த கைனருகாபா, 1980 மற்றும் 1990களில் உகாண்டா பலவீனமாக இருந்தபோது இஸ்ரேல் தங்களுக்கு ஆதரவாக நின்றதாகக் குறிப்பிட்டார். “இப்போது எங்களது ஜிடிபி (GDP) 100 பில்லியன் டாலராக உயர்ந்து, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில், நாங்கள் ஏன் அவளை (இஸ்ரேலை) பாதுகாக்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்ரேல் உகாண்டாவுடன் ராணுவ மற்றும் உளவுத்துறை ரீதியான உறவுகளைப் பேணி வருவதுடன், கைனருகாபா உள்ளிட்ட உகாண்டா வீரர்களுக்குப் பயிற்சியும் அளித்துள்ளது.
இடி அமினின் ஆட்சியின் போது, 1976 இல் டெல் அவிவ்-விலிருந்து பிரான்ஸ் சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் 139 கடத்தப்பட்டு உகாண்டாவின் என்டெபே விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
ஜூலை 3, 1976 அன்று இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் 106 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சகோதரர் யோனதன் யானி நெதன்யாகு மட்டும் கொல்லப்பட்டார்,




